பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவு !

“எழுத்து” விமரிசனம் செய்திருக்கிறது. இந்த எழுபது பக்கத்து நவீனம் ‘சாஹித்ய அகாடெமி’ப் பரிசுக்கு எட்டக்கூடிய தகுதி பெற்றிருக்கிறதாம்.

பாவம்!...பரிதாபம்!...

நவீனத்திற்குரிய பரப்பான கட்டுக் கோப்பு, நிலையான களன், உறுதியான உறுப்பினர் அமைப்பு, உட்பொருள், தூண்டுதல், உருவம், சோதனை போன்ற இன்றியமையாப் பண்புகளைத் தொட்டுக்காட்ட விழையாமல், க.நா.சு என்கிற ஒற்றைப் பனைமர நிழலில் ஒண்டி, அந்த நிழலின் தற்காலிகமான சுகத்தின் அளவையே தன் இலக்கிய அதிர்ஷ்டத்தின் தலையெழுத்தாகவும், அந்தத் தலையெழுத்தையே தன் இலக்கிய வெற்றிக்கு உரிய ஓர் எல்லைக் கோடாகவும் தன் கருத்தில் ஏற்றிக்கொண்டு அதன் கனத்திலேயே ஆத்ம திருப்தி பூண்டு ஒழுகி வரும் அன்பர் திரு. ஆர். ஷண்முகசுந்தரம், புதிய விழிப்பும், பழைய பெயரும் பெறவேண்டுமானல், அவர் அந்த ‘அதிசய உள்ளத்’தினின்றும் விலகித் தம்முடைய ‘சொந்த வழி’யில் நடக்க வேண்டும்!... ‘சொந்த நடை’யில் நடக்கவேண்டும் அதுதான் அழகு.

ஆம்; உண்மை என்றைக்குத்தான் இனித்தது, ஐயா!...நான் சொல்வது கசப்பாக இருக்கிறதா?

110