பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இவ்விரு ‘மெளனங்க’ளுக்குப் பொருள் கை விரிப்பும் எள்ளிய நகையும்தான்!

❖❖❖

தமிழ் இலக்கியத்தில் ‘புரட்சி’ செய்தவர்கள் ‘விந்தன்’ போன்றோர் ஓரிருவர் இருக்கிறார்கள். அவர்களைப் படிக்க வேண்டும்; படித்து முடித்துச் சிந்திக்க வேண்டும். உண்மையான சமுதாயப் புதினங்கள் எழுதும் ஆற்றல் வளரும் சொந்த விருப்புவெறுப்புக்கள் குடியிருக்கும் மனித மனம், புனிதமான இலக்கிய மனத்திற்குக் கூடுவிட்டுக் கூடுபாயப் பழகிக் கொண்டால்தான்,உண்மையான ஆத்ம ஞானம் பெற வாய்ப்புக் கிட்டும். பார்த்தவர்களையும் பழகியவர்களையும் படித்தவர்களையும் சிறு பொழுதேனும் பிரிந்தால், தமிழ் எழுத்துக்களில் வாழக் கனவு காணலாம். அப்போதுதான் தமிழ்ப் புதின இலக்கியத்தின் நிறமும் கறுப்பு அன்று என்ற ‘உண்மை புலனாகும்!

156