பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. பாவை விளக்கு
—அகிலன்—

கனவு காணும் எழுத்தாளன் தணிகாசலம். படிப்புக்காகத் தன் தொலைதூர உறவினர்களின் வீட்டில் தங்கிப் படிக்கிறான். அங்கே ஒரு விதவை. அவள் பெயர் தேவகி. ‘அக்கா’என்று பாசம் காட்டுகிறான் தணிகாசலம். ஆனால், தேவகியோ, “அக்கா என்று அழைக்காதே” என்று துடிக்கிறாள்.

‘என்னைப் புரிந்து கொள்!’ என்று புரியவைக்க முயலுகிறாள் தேவகி. அவனது தூய்மை அவளைக் கூச வைக்கிறது. கடைசியில், தமிழ்ப் பெண்ணின் பண்பாடு உடைப்பெடுத்து அவளைத் தூய்மையாக்கி விடுகிறது.

படிப்பு முடிந்ததும் உலகத்தைக் காணும் எழுத்தாளன் மனம் குமுறுகிறது. பாவத்தை —ஏழ்மையை-அக்கிரமங்களை நீக்கிவிடத் துடிக்கிறது உள்ளம். சிற்றூரிலே கணக்கு வேலை. எழுத்துக்கள் பத்திரிக்கைகளைத் தேடி ஓடுகின்றன.

157