பக்கம்:கல்வி உளவியல்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274. கல்வி உளவியல் திறன்களை வளர்க்கும் வழிகள் : கற்றலுக்குரிய விதிகள் யாவும் இங்கும் பயன்படுகின்றன. இவ்விதிகளிலிருந்து துணையாகக்கூடிய மேலும் சிலவற்றைக் கூறுவோம். (1) தொடக்கத்திலிருந்தே சரியாகச் செய்வதை வலியுறுத்த வேண்டும். எவ்விதத்திலும் கெட் ட பழக்கங்கள் ஏற்படாமல் விழிப்பாக இருத்தல் வேண்டும். ஆசிரியர் சரியான வழியில் கொண்டுசெலுத்த வேண்டும். (2) கற்க வேண்டியதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அதிகத் திறனடைய வேண்டுமானல், நாம் கற்க விரும்புவதில் அதிகப் பயிற்சி பெறவேண்டும். (3) ஒரு செயலைத் துண்டுபடுத்திப் பயிலாமல் முழுமையாகப் பயில வேண்டும். சிறு சிறு பகுதிகளைமட்டிலும் தெரிந்து கொண்டால் முழுச் செயலில் திறன் அமையாமல் போகின்றது. (எ-டு) தட்டச்சுப் பொறியினை இயக்குவதில் பல படிகளைத் தனித்தனியாகவும் அவற்றை ஒருங்கிணைத்தும் பயில வேண்டும். (4) ஒரு செயலைக் கற்கும்பொழுது தகுந்த இடைவேளை இன்றி யமையாதது. உடனடியாகத் தொடர்ந்து பயிற்சிபெருமல் காலம் இடை யிட்டுப் பயிற்சிபெறல் கலம் பயக்கும். (5) நமக்கு வேண்டிய திறனுக்குமேல் அதிகமாகவே கற்க வேண்டும். (எ-டு) தட்டச்சுப் பொறியில் மணிக்கு 4 பக்கம் அடிக்க வேண்டும் என்ற திறனைப்பெற விரும்பினல் 44 பக்கமாவது அடிக்கக் கற்க வேண்டும். உளிக்குப் பிடி வேண்டுமாயின் உலக்கை அளவைக் குறிக்கோளில் வைக்க வேண்டுமென்பது உலக வழக்கு மொழி. (6) செயலில் வேகமும் வேண்டும்; அதைச் சரியாகவும் செய்ய வேண்டும். முதலில் வேகப்பயிற்சி பெற்று, பிறகு சரியாகச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். (எ.டு) தட்டச்சுப் பொறியினை இயக்குதல், நூல் நூற்றல். (7) பிறர் உதவியை அதிகமாக நம்பியிருத்தல் ஆகாது. முதலில் கற்கும்பொழுது பிறர் உதவி தேவையே. வரவர அதனைக் குறைத்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அவசரமான சமயங்களில் மட்டிலும் உதவி பெறலாம். (8) அனைத்திற்கும் மேலாக நாம் மேற்கொள்ளும் செயலில் ஒரு நோக்கம் பெறல் வேண்டும்; குறிக்கோள் வேண்டும். வேலையின் பயன், போட்டி மனப்பான்மை, விடா முயற்சி, வெற்றியில் ஆர்வம் ஆகியவை திறனுடன் கற்கத் தூண்டும் கூறுகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/296&oldid=778139" இலிருந்து மீள்விக்கப்பட்டது