பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

95


கின்றன. ஆயினும் உள்ளக்கிளர்ச்சிகளின் வெளிப்பாடு குறையினும், உள்ளிருக்கும் உள்ளக்கிளர்ச்சி அநுபவங்கள் குறைவதில்லை. நேர் வெளிப்பாடு குன்றுதலாலும், எல்லா உள்ளக் கிளர்ச்சிகளையும் சொல்லால் உணர்த்த முடியாததாலும், குழந்தையின் நடத்தையை அச்சம், வெகுளி, வெறுப்பு போன்றவை எவ்வாறு ஆளுகின்றன என்பதை அறிந்து கொள்வது அரிதாகின்றது. எனவே, சிறுவனை ஊன்றிக் கவனிச்கவேண்டும்.

நாளடைவில் அறிவு இயக்கத்திறன்கள், கவர்ச்சிகள், கற்பனையாற்றல்கள் ஆகியவை முதிர்ச்சி பெறுகின்றன. தற்போதைய தேவைகளை விட நீண்ட வருங்காலத் தேவைகளும் பழைய நினைவுகளும், புதிய திட்டங்களும் உள்ளக்கிளர்ச்சிகளை அறுதியிடுகின்றன. முன்னர் மகிழ்ச்சியூட்டிய மாடிப்படி ஏறுதல், சக்கரம் உருட்டுதல், பொம்மை வைத்து விளையாடுதல் போன்றவை இப்பொழுது மகிழ்ச்சி தருவதில்லை. பட்டம் விடுதல், பம்பரம் விடுதல் போன்றவை மனநிறைவு தருகின்றன. முன்னால் அந்நியரைக் கண்டு அஞ்சினவன், இப்பொழுது தன்னை மருட்டியவனையும் அடித்தவனையும் கண்டு அஞ்சுகின்றான். குமரப்பருவத்தில் பஞ்சம்போர் போன்ற சமூக நெருக்கடியான செய்திகளைக் கண்டு அஞ்சுகின்றான்.

குழந்தையின் கிளர்ச்சி நடத்தையைப் புரிந்து கொள்ளுதல்: குழந்தைக்கு நேரிடும் செயல்களால், அவனிடம் கிளம்பும் உள்ளக்கிளர்ச்சிகள் அவனுடைய மனநிலையைப் பொறுத்தவை. குழந்தையின் மனநிலையை அறிந்தால், நியாயமற்ற நடத்தை என நாம் கருதும் பலவற்றை விளக்க முடியும். அபாயமில்லாத பொழுது குழந்தை அஞ்சினாலும், குறை சொல்லுவதற்கு முன் மனம் நொந்தாலும், அச்சத்திற்கும் வெகுளிக்கும் காரண மில்லையென்று ஆலோசனையின்றிக் கூறுவதால் பயன் இல்லை. அவன் முன்னமே அல்லலுற்றிருப்பதால் எளிதில் அஞ்சுகிறான் என்றும், தன்னம்பிக்கை இன்மையாலும் மற்றவர் கள்பால் கொண்ட எதிர்ப்பாலும் அவன் குறை கூறுவதால் புண்படுகின்றான் என்றும் அறிதல் வேண்டும்; அவற்றிற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவனைக் குணப்படுத்த முயல வேண்டும்.

குழந்தையின் உள்ளக்கிளர்ச்சிகள் பள்ளிச்செயல்களுடனும் கலந்து நிற்கின்றன. பாடத்திட்டம் நன்முறையில் அவனுடைய ஆற்றலுக்கேற்றவாறு அமைந்திருப்பதால், குழந்தை தான் சாதிப்பதில் மகிழ்ச்சியடைகிறான். மேலும் உடன்பயில்வோர்,