பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குநிலையும் உள்ளக் கிளர்ச்சிகளும் 1?3.

கடுஞ்சொல் போதும், குழந்தை தன்னம்பிக்கையை இழக்காதபடி தண்டனை தருதல் வேண்டும்.

(5) உணர்ச்சி ததும்பும் மாணாக்கர்களிடம் ஆசிரியர் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தவறான செயலின் காரணத்தை நன்கு அறிந்த பிறகே தண்டிக்க வேண்டும். ஆத்திரத்திலும் சினத்திலும் தண்டனைகளைக் கையாளலாகாது. அவசியமற்ற தண்டனைகளை மேற்கொள்ளவும் கூடாது.

சில உள்ளக் கிளர்ச்சிகள்

உள்ளக்கிளர்ச்சிகளும் ஊக்கு நிலைகளுக்கு ஆதாரமா கின்றன. உள்ளக்கிளர்ச்சி என்பது யாது? உள்ளக்கிளர்ச்சி: இன்னது என்பதை வரையறைப்படுத்தி உரைத்தல் இயலாது. நாம் அனைவரும் இதனை அறிவோம்; ஆயினும், அதன் பொருளை சொற்களால் எல்லை கட்டி உணர்த்த முடியாது. வெகுளி' என்பது ஒர் உள்ளக் கிளர்ச்சி; ஆனால், அதனை நாம் உணர்ச்சி எனக் குறிப்பிடுகின்றோம். சாதாரணமாக நாம் உணர்ச்சிக்கும் உள்ளக்கிளர்ச்சிக்கும் வேறுபாடு அறியாது அச்சொற்களை மாற்றி வழங்குகிறோம். ஆனால், உளவியலில் வெகுளி, அச்சம், அன்பு ஆகிய அநுபவங்களைக் குறித்தற்கு உள்ளக்கிளர்ச்சி என்றே வழங்குகின்றனர். உள்ளக்கிளர்ச்சி என்பதை உயிரியின் கிளர்ந்தெழும் நிலை என்று வரையறை செய்வர் உளவியலார். உள்ளக்கிளர்ச்சி ஏற்படுங்கால் உயிரி முழுவதும் நிலைகுலைவதால் இவ்வாறு வரையறை செய்யப் பெற்றுள்ளது. பண்டைத் தமிழர் உள்ளக் கிளர்ச்சிகளில் பாட்டிற்குச் சிறந்தனவற்றை மெய்ப்பாடு என வழங்கினர். மெய்ப்பாட்டில் உடல் நிலையும் இன்றியமையாது என்பதனை யும் அவ்வுடல் நிலைகளே அம்மெய்ப்பாடு வெளிப்படுவதற்கு வழியாக நிற்கின்றன என்பதனையும் நன்கறிந்திருந்தனர். தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் என்பார் மெய்ப்பாடு என்பது பொருட்பாடு. அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படு: வதோர் ஆற்றான் வெளிப்படுதல்' என்று கூறியிருப்பதை அறிக.

29. உள்ளக் கிளர்ச்சி.Emotion. 30. Qaugos-Anger. 31. உணர்ச்சி.Feeling. 32, 34+ib-Fear. 33. 3/6rls-Love,