பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

கல்வி உளவியல் கோட்பாடுகள்



உடம்பார் அழியில் உயிரார் அழிவர்; திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார். உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே. உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்; உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்; உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே.” என்று கூறி உடலோம்பலை உயர்த்திப் பேசியவர். அது கிடக்க. - -

குழந்தை, குமர உடல்நல வியல்

  • み子&6ösf வைத்துக்கொண்டுதானே சித்திரம் எழுத வேண்டும்? என்று நாம் கேள்வியுற்றுள்ளோம். குழந்தையின் உடல் நலமே கல்விக்கு முதல் அடிப்படை. குழந்தைகளும் குமரர்களும் தம்முடைய இயற்கையறிவினால் மட்டிலும் உடல் நலத்தைப் பெறமுடியாது; நற் பழக்கங்களை அறிந்துகொள்ள இயலாது. அவர்களின் உடல்நல வாழ்வைப் பிறர் தொடங்கி வைத்தல் வேண்டும். ஒழுங்கான முறைப்படி அவர்கள் சில செயல்களைத் தவறாமல் செய்து வருதல் வேண்டும். இயற்கைக் கடன்கள், பல் தூய்மை, கண் தூய்மை போன்றவை முறைப்படி இயற்றப்பெறுதல் வேண்டும்.

மாணாக்கர்கள் இத்தகைய பழக்கங்களுக்குக் காரணம்: வினவினால், ஆசிரியர்கள் அவற்றைத் தெளிவாக விளக்கிக் கூறுதல் வேண்டும். குமரப் பருவத்திலும் அதற்குச் சற்று முன்னரும் பால் உறுப்புகளின் அமைப்பைப்பற்றியும், அவை செயற்படுவதுபற்றியும் மாணாக்கர் அறிய விரும்புவர். அவர்கள் விடுக்கும் வினாக்களுக்கு ஒளிப்பு மறைப்பின்றி உண்மையை மறைக்காமல், அல்லது மழுப்பாமல், தக்க முறையில் சரியான தகவல்களைத் தருதல் வேண்டும்.

உடல்நல வியல்பற்றிய கல்வி உடற் பயிற்சி, இயற்கை நூல், பள்ளியின் அன்றாட உடல்நலச் செயல்கள் ஆகியவற். றுடன் தொடர்புடையது. எனவே, அதைத் தனிப் பாடமாகப் பயிற்றாமல் சமூகப்பாடம் உட்படப் பிற பாடங்களுடன் இணைத்தே பயிற்ற வேண்டும். குழந்தையின் உள்ளத்தில் உடல் நலத்தைப் பற்றிச் சீரிய மனப்பான்மை ஏற்படாவிடில், உடல்நலத்தைப் பற்றிய நற்பழக்கங்கள் படியா. எனவே, 3. திருமந்திரம்-725. -