பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதிப்பீடும் சோதனையும்

493

பெறுவதை நாம் அறிவோம். தேர்வுகளின்றி மாணக்கர்களின் தேர்ச்சியை உத்தேசமாக அறுதியிடுவது விரும்பத்தக்கதன்று. பல இடங்களில் மாணாக்கர்கள் பயிலுகின்றனர்; பல பள்ளிகளில் பயிலுகின்றனர். பல ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். ஆகவே, பொதுத் தேர்வுகள் இன்றியமையாதவை.

தேர்வுகள் மாணாக்கர்களின் திறனையும் கற்றவற்றையும் மதிப்பிடுவதற்கு ஏற்பட்ட கட்டுப்பாட்டுடன் அமைந்த உற்று நோக்கல்4 ஆகும். ஒரே கட்டுப்பாடான சூழ்நிலையில் எல்லோரையும் ஒரே காலத்தில் மதிப்பிடுவதற்குத் தேர்வுகள் துணை செய்கின்றன.

பயில்வோருக்கும் தேர்வுகள் பயன்படுகின்றன. அவை மாணாக்கர்களை ஊன்றிப் படிக்கத் துரண்டித் திட்டமான அறிவைப் பெறச் செய்கின்றன. பள்ளி வாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் ஒரு வித ஒழுங்கினை ஏற்படுத்தி விரும்பத்தக்க வகையில் போட்டி மனப்பான்மையை உண்டாக்குகின்றன. தேர்வுகளின் பயனாகப் பயில்வோர் தம் அறிவின் குறைபாடு களை அறியவும், பயிற்றுவோர் தம் பயிற்றலின் குறைநிறைகளை அறியவும் முடிகின்றது. எனவே, தேர்வுகள் பண்டு தொட்டு இன்றுவரை இன்றியமையாத தொல்லையாகவே இருந்து வருகின்றன.

இன்று இருவிதச் சோதனைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஒன்று, கட்டுரைச் சோதனைகள். மற்றொன்று, புதிய முறைச் சோதனைகள். வாய்மொழிச் சோதனைகளும்5 சில சமயம் மேற்கொள்ளப்பெறுகின்றன.

கட்டுரைச் சோதனைகள்6

கட்டுரைச்சோதனையை நாம் நன்கு அறிவோம். இது பல்லாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருவது, மூன்று அல்லது இரண்டரை மணிக் கால அளவில் ஐந்து அல்லது ஆறு வினாக்களைக் கேட்டு ஒரு பாடம் முழுவதிலும் மாணாக்கனுக்கு இருக்க வேண்டிய ஒன்று அல்லது இரண்டு அல்லது, மூன்றாண்டு அறிவை அளந்தறிய முயல்கின்றது இந்தச் சோதனை. புது முறைச்சோதனைகள் செல்வாக்குப் பெற்ற பிறகு இதன் செல்வாக்கு குறையத்தொடங்கியுள்ளது. எனினும், இந்தச் சோதனையை அடியோடு நீக்க வழியே இல்லை; கல்லூரி வகுப்பு-


4. கட்டுப்பாட்டுடன் அமைந்த உற்று னோக்கல்-Controlled observation.
5. வாய்மொழிச்சோதனைகள்- oral tests.
6. கட்டுரைசோதனைகள்-Essay type tests.