பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

கல்வி உளவியல் கோட்பாடுகள்


களில் இதுதான் இன்றும் ஆட்சி செலுத்தி வருகின்றது. பாலார்டு7 போன்ற கல்வி அறிஞர்கள் இச்சோதனை சரியான அளவு கருவியல்ல என்பதைப் பல்லாண்டுகட்கு முன்னரே மெய்ப்பித்து விட்டனர்; இதிலுள்ள குறைகளையும் நிறைகளையும் நன்கு எடுத்துக்காட்டியுள்ளனர். அவற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டு கூறுவோம்.

குறைகள்: (1) இந்தச் சோதனைகளால் அளந்தறிய்க்கூடிய பொருளறிவு மிகக் குறைவு. சிறிய கால அளவில் ஆண்டு முழுவதும் படித்தறிந்த பாட அறிவை ஐந்தாறு வினாக்களால் தேறிவிட முடியும் என்று எண்ணுவது பொருந்தாததொன்று. ஒரு வினாவைத் தப்பாகப் புரிந்து கொள்பவர் அல்லது அவ்விடையின் பகுதி கற்பிக்கப்பட்டபொழுது பள்ளிக்கு வாரா திருந்தவர் சரியாக விடையிறுக்க முடியாது போகக் கூடும்.

(2) தேர்வாளர்கள் விடையேடுகளை ஒரே பொது நோக்கமும் ஒரேவித நோக்கமும் கொண்டு திருத்துகின்றனர் என்று கூறுவதற்கில்லை. விடைகளின் தகுதியை யறிந்து ஏற்ற மதிப்பெண்களைக் கொடுப்பது தேர்வாளர்களின் மன நிலையையே பொறுத்துள்ளது. முக்குணவசத்தால் முறை பிறழ்ந்து போவதுடன் நில்லாது, சினம், மகிழ்ச்சி முதலிய வற்றிற்கேற்ப மதிப்பெண்கள் குறைந்தும் மிகுந்தும் போகக் கூடும்.

(3) கட்டுரை என்பது பல கூறுகளைக் கொண்டதிறனால் உண்டாக்கப்பெற்றதொரு படைப்பு. ஒவ்வொருவரும் தத்தமக் கேற்றவாறு அளவுகோல்களை மாற்றிக் கொண்டு மதிப்பிடுவர்.

(4) இச்சோதனையால் பெறும் மதிப்பெண்கள் நம்பத் தகுந்தவையல்ல; மாறுபாடில்லாதவையுமல்ல. நன்கு மதிப்பிட வேண்டுமாயின் அதிகக்காலம் ஆகும். பொருளறிவு இல்லையா யினும் சொற்றிறமையால் அதிக மதிப்பெண்கள் பெறுதல் கடும்.

நிறைகள் : (1) சோதனைகளை ஆய்த்தம் செய்வதும் எளிது; கையாளுவதும் எளிது. வினாக்களுக்கு எவ்வாறு விடையிறுப்பது என்பதுபற்றித் தேர்வாளர் மாணாக்கர்கட்கு விளக்கத் தேவை இல்லை.

(2) பள்ளிக் கல்வி ஏற்பாட்டிலுள்ள எல்லாப் பாடங்கட்கும் இம்முறைச் சோதனைகளை எளிதில் கையாளலாம்.


7. பாலார்டுச் சோதனைகள்-Ballard tests