5. கவிஞன் 119.
கோள்நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி நிணிலம் மாரி இன்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப் பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந்து அறங்கள் மாறி ஆணே இவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடின் என்ருன்.
(சீவகசிந்தாமணி)
- அரசன் கோல் கோடினுல் இவ்வுலகில் விளையும் அயா கிலைகளை இங்ஙனம் குறித்துக் காட்டி அரச குலத்துக்குக் திருத்தக்க தேவர் இப்படிப் புத்தி போகித்திருக்கின்ருர்.
அரசியல் துறைகளையும் ஆட்சி முறைகளையும் இக்காட் -டுக் கவிஞர்கள் அறிந்திருப்பதுபோல் வேறு எங்க காட்டுக் கவிஞரும் இந்த அளவில் அறிந்து கொள்ள வில்லை. அரசியல் முறைகளை இவர் உணர்ந்து தெரிந்துள்ள நிலைகளைக் தனித் தனியே விளக்க நேர்ந்தால் அது பெரிய ஆட்சியின் காட்சி யாப்ப் பெருசிச் சிறந்த ஒரு வேந்து நாலாய் விரிந்துவிடும். காடும் மக்களும் கலம்பல அடையும்படி பாடும் புலவர் கள் பாடுபட்டு வந்துள்ளனர். உலக பரிபாலகர் என ஒளி பெற்று கின்ற மன்னர்களும் புலவர் வாய்மொழிக்குச் செவி சாய்த்து அவரது போதனைகளைக் கேட்டு மகிழ்க்தி ஆதரவோடு தெளிந்து ஆட்சி புரிந்து வங்கிருக்கின்றனர்.
நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் தமிழில் பெரும் புலமையுடையவன். அருந்திறலும் பெருக்தகைமை யும் ஒருங்கு நிறைந்திருந்தவன். அவன் குடபுலவியனர் என் லும்புலவரைத் தனக்கு உரிமையான அருமைத் துணையாகப் பேணி வந்தான். அம்மன்னனுக்கு இன்னுயிர்த் துணையாய் இசைந்திருந்த இவர் சமையம் நேர்ந்த போதெல்லாம் கன் னயமான நீதி முறைகளையும் உறுதி கலங்களையும் உரிமை யுடன்உரைத் துவந்தார். நிலத்திலி ருந்துவிளைவுகளைப்பெருக்