லா. ச. ரா.
59
'நான் தப்பாப் பேசியிருந்தால் சாமி மன்னிச்சுக் கணும்.'
ஒன்று புரிந்தது. இவர்கள் விட மாட்டார்கள்.
பல்லை விளக்கிவிட்டுத் திரும்பிவந்தபோது இருவரு மில்லை. மேசை மீது தட்டும், மடலும் மூடியிருந்த துணி யைத் திறந்ததும்-நேற்றுக் குழித்தட்டில் சேவை-ஒரு கிண்ணத்தில் பால், ஒரு குழியில் தேங்காய்ப் பொடி மற்றும் ஒன்றில் விழுது நெய். -
வேண்டாம் என்று விரைத்தாலும், தின்னும்போது வேண்டித்தானிருக்கு. தின்னத் தின்னப் பசிக்கவும் பசிக் கிறது. ஹோட்டலில் இது கிடைக்குமா? கிடைத்தாலும் இவ்வளவு அயனாய்க் கிடைக்குமா? -
நாடார் வரும் சத்தம் கேட்கிறது. நாடார் மட்டும். வெள்ளிச் சொம்பு, வெற்றிலைத் தட்டுடன். காப்பி என் கிற திருஷ்டியை அனுபவிச்சாகணும். (மடக்-மடக்) அனுபவிச்சாச்சு, வெதவெதன்னு சூடுகூட இல்லை. எப்படித்தான் இதை இவர்கள் ருசிச்சுக் குடிக்கிறாளோ?
'சாமி தாம்பூலம் போடுமா?’’
அவசியம் போட வேண்டியதுதான் . குமட்டல் அடங்க.
'நாடார், இனி எனக்கு வேணும்னா நானே உங் களைக் கேட்பேன். நீங்கள் சிரமப்படாதீங்க. எனக்கு சங்கோஜம் கிடையாது.” -
'இது எப்படிச் சிரமம் ஆகும்? இது என் சந்தோஷம், என் பாக்கியம்.” -
'நாடார்! நீங்கள் எல்லாரிடத்திலும் இப்படித்தான் பேசுவீங்களா, இல்லை, இந்த ஐஸ் எனக்கு மட்டுமா?"
நாடார் கன்னத்தில் போட்டுக் கொண்டார். 'சாமிக்குத் தெரிஞ்சு என்ன இருக்க முடியும்?"