பக்கம்:கள்வர் தலைவன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) கள்வர் தலைவன் 57 எழுதியிருக்கின்றது உண்மைதான் : எனது முத்திரையு மிருக்கின்றது. ஆயினும் எனது இராஜ்யத்தின்மீது ஆணேப்படிச்சொல்லுகின்றேன். நான் இம்முத்திரையையு மிடவில்லே இங்கிருபத்தையுமனுப்பவில்லை. பிதாவுக்குப் பிற்காலம் என்னேயன்றி ஏமாங்கதன் ஒருவனுக்குத்தான் இம்முத்திரையிடும் சூட்சுமம் தெரியும். ஏமாங்கதன் இங்கெப்படி வந்திருக்கக்கூடும் ? எனக்கொன்றும் தோன்றவில்லை. பா. ஏமாங்கதனவது இங்குவருவதாவது ! நான் அனுப்பி யிருக்கின்ற கொலையாளிகள் திரும்பிவரா விட்டாலும் இந்நேரம் அவர்கள் தங்களுடைய வேலேயை முடித்து விட்டிருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். செளரி. இல்லே! இல்லை ஏமாங்கதன்தான் ஏதோ இதற் கெல்லாம் காரணமாயிருக்கின்ருன் என்று தோற்று கின்றது. ஆயினும் அவனுக்கு இவ்வளவு யுக்திபோதாது. அவனுக்குதவியாக யாரோ இருந்துக்கொண்டு அவனே ஆட்டி வைக்கின்ருர்கள். நாம் இனிச்சித்தமா யிருக்க வேண்டும். இந்த ஒரு ஒலை எவ்வளவு வேலே செய்திருக் கின்றது பார் ! - பா. ஆமாம் நமக்குத்துணையான அரசர்களுடைய சைனியங் களே யெல்லாம் நாமே அழித்து அவர்களே கமக்குப் பகையாக்கிக் கொண்டோம். இந்த யுத்தத்தில் நமது படைகளும் மிகவும் அழிந்தன. போதாக்குறைக்கு தமது பாசறையும் யாரோ கள்வர்களால் கொள்ளே யடிக்கப் பட்டதாம் ! - செளரி. இம்மட்டோ! நமக்குத்துணையாயிருக்கும் மற்ற அரசர்களும் நம்மைப்போன்ற மற்ருெருவனுக்கு வந்த கதிதானே நமக்கும் வருமென்று நம்மிடத்தில் இருக்கும் கம்பிக்கை குன்றுவார்களன்ருே இதோ எனக்குப் பெண் கொடுக்கிறேனென்று சொல்லிக் கோண்டிருந்த பாஞ்சாலதேசத்தரசன் என்மீது கோபங்கொண்டு இனி உன்னுடன் ஒருசம்பந்தமும் செய்யமாட்டேன் என்று எழுதியிருக்கின்ருன் இதற்கென்ன செய்வது ? பா. ஆயினும் நாம் அதைரியப்படவேண்டியதில்லையென்றே கினைக்கின்றேன். இன்னும் ஒருசேவகன் விரைந்து வருகிருன். சே. ராஜாதிராஜனே ! நமது சேனதிபதி உமக்கு இங்கிரு பத்தை அதிசீக்கிரத்தில் கொண்டுபோய்க் கொடுக்கக் கட்டளை யிட்டனுப்பினர் என்னே! (ஓர் ஓலைச்சுருளைக் 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/61&oldid=779768" இலிருந்து மீள்விக்கப்பட்டது