இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാഠഭൂു മാ
தீதோ இலைநன்றோ!
தேற்றிக்கொள் உன்மனத்தை! வீணாய் வருந்தாதே!
வீறுகொள் உள்ளத்தில், காணாமற் போனவுன்றன்
கண்மணியைத் தேடிடுவோம்! 830 மேலேவா” - என்றபடி,
அன்பு மிதந்துவரக் காலால் தரையறைந்து,
கண்ணால் அழைத்ததுவாம்!
காளை யழைத்தவுரை
கழுதை மனங்கொண்டு, தோளை மிகத்தாழ்த்தித்
தொங்கும் முகத்தோடு, நாணம் உயிர்விழுங்க
மெல்ல நடந்துவந்து, 835 காணவும் வெட்கமுற்றுக் கண்கள் கவிழ்ந்தபடி "அண்ணா:இப் பேதையினை
அன்பால் பொறுத்திடுங்கள்! பெண்ணாய்ப் பிறந்தால்
பெருந்துயரம் வந்தாலும் தாங்கத்தான் வேண்டுமென்ற
தன்மை தெரியாமல், நீங்கிவிட - என்னுயிரை
நீக்கிவிட எண்ணிவிட்டேன்! 840
83