பக்கம்:கழுதை அழுத கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യയഠയ്ക്കു സ്പെ

ஒத்தநடை போட்டே

உலாவிவரச் செல்வதுவும்,

பட்டுமயிர் தொங்கிப்

பளபளக்கும் மேனிக்குக் 65 கட்டிச் சவர்க்காரம்

மூக்கு கமகமக்கப் போட்டுக் குளிப்பாட்டிப்

பூங்கழுத்துப் பட்டியிட்டு, சேட்டுக் குழந்தைபோல்

சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சி வளர்க்கப்

படுவதுவும் கூறுவதோ?

பஞ்சையினும் பஞ்சைகளாய்.

பாழும் பழுதைகளாய் 70 வந்து பிறந்தோம்;

வயிற்றுக் குணவுண்டா? வெந்து புழுங்குவதைச்

சொன்னால் விளங்கிடுமோ?

தூக்கு தூக் கென்று, நம் -

வாழ்க்கையெல்லாம் தூக்கிடினும்,

ஏக்கத்தைக் கேட்டு, ஆர் * ×

இரங்கியொரு சொல்சொல்வார்?

காலை இழுத்துவந்து,

கால்கட்டி, வால்கட்டி, 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/48&oldid=665394" இலிருந்து மீள்விக்கப்பட்டது