இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാക്തൃു് -്@ു് ശാ
தீனிக்குக் கேடெனவே
ஆண்டை விரட்டிவிட்டார்!
நொண்டிநொண்டிச் செல்வார்;
நொடிதங்கிப் பின்நடப்பார்- 330 கண்டுகண்டு நொந்தேன்!
கடினமனக் காரிநான்! இல்லையென்றால் என்றோ
இறந்திருக்க மாட்டேனா? புல்லையா தின்றேன்!
புழுதியன்றோ தின்றதுநான்! இப்படியே கண்முன்
இருந்த அவரொருநாள் எப்படியோ எங்கேயோ
என்னைவிட்டுப் போய்விட்டார்! 335 காணாமற் சென்ற
கணவன் தனை நினைந்தே ஊனுண்ண மாட்டேன்;
உறக்கம் கொளமாட்டேன்; நீரருந்த மாட்டேன்;
நிழலில் படுத்திருக்கேன் ஈருயிர்க் காரிநான்
இங்ங்ன் இருந்ததனால், கால்கள் சவசவக்கும்;
கண்கள் மிகவிருளும்! 340 வால்வீசக் கூடவுடல்
தெம்பின்றி வாடிவிட்டேன்!
32