இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാണ്ടൂ ിലന്തൂു് 77°
கந்தை அணிவார்
ஒருவர் பிறிதொருவர்
செந்தாழம் பட்டைச்
சிறப்பில்லை என்றெறிவார் !
நோயால் வருந்தும்
ஒருகூட்டம்; வேறொன்றோ ஒயாமல் உண்டு
செரிக்க மருந்துண்ணும்! 455
கொட்டுமழை வெய்யில்
குளிரில்வாழ் வார்.ஒருவர்;
பட்டுத் தலையணையில்
பாதம்வைப் பார்ஒருவர்!
கோயிலென்றும் தெய்வமென்றும்
கோடிக் கதைபடிப்பார்;
வாயிலொன்றும் நெஞ்சிலொன்றும்
வாழ்க்கை நடத்திடுவார் !
'பார்ப்பார்'என் றோரினத்தைப்
பார்த்திருக்க மாட்டாய்நீ! 470
ஊர்ப்பால் வருந்துயரம் -
எல்லாம் அவரால்தான்!
நெற்றி நிறையவெண்
நீறணிவார்; உச்சியிலே
45