இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ののの2多 ?@225 ●ラの2多
கற்றைக் குடுமிமயிர்
காற்றில் சிலிர்சிலிர்க்கும்!
பூணுால் அணிவார்;
'புரோகிதங்கள் செய்திடுவார்;
காணாக் கடவுளுக்கே
"காவலர்யாம்' என்றுரைப்பார்! 475
தெய்வப் பிறவியென்பார்;
தீண்டிவிட்டால் தீட்டென்பார்;
பொய்புளுகு மூட்டைப்
'புராணங்கள் பாடிடுவார்.
'சாத்திரங்கள் பேசிடுவார்; 'சாதி குலம்வகுத்தார்;
நாத்திறத்தால் ஏய்ப்பார்;
நடிப்பால் பிழைத்திடுவார்!
அன்னவரின் பேச்சில்
அறவே மயங்கியவர் 480 மன்னவ ரானாலும்
மதியிழந்தே போவார்கள்.
மொத்தத்தில் மக்களெனும் மூட இனத்தினுக்கு
மெத்தப் பெருமையில்லை!
மேற்பிறவி என்பதும்பொய்!
46