பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

61

சுதீந்திரபோஸ் போன்ற தலைவர்களை அனுப்பி எதிர்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டது!

ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியத் தலைவர்களது பேச்சாற்றல் எடுபடவில்லை; பிரிட்டிஷ் ராஜ தந்திர சூழ்ச்சிகளை முறியடிக்க முடியவில்லை என்ற உண்மை வெளிநாடுகளுக்கும், காந்தியடிகளுக்கும், காங்கிரஸ் மகா சபைக்கும் புரிந்தது.

இந்த நேரத்தில் இந்தியாவிற்கு வந்து திரும்பிய கிறித்துவப் பாதிரிமார்களும் பிரிட்டனுக்கு ஆதரவாகவே பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதனால் பிரிட்டனுடைய கோயாபல்ஸ் பிரச்சாரமே ஓங்கி நின்றது. வெளிநாட்டார்கள் அதையே நம்பி வந்தார்கள்.

பிரிட்டிஷாருடைய உண்மைகளை நம்ப விரும்பாத அமெரிக்கா, காந்தியடிகளாரை அமெரிக்கா வருமாறு பல முறை வேண்டி அழைத்தார்கள். ஆனால், மகாத்மாவுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு ஏற்படாத நெருக்கடிகள் இந்திய அரசியலில் ஏற்பட்டன. அதனால் அவர் அமெரிக்கா செல்ல மறுத்தார். காரணம், காந்தியடிகள் ஒரு அடிமை நாட்டுத்தூதுவராக வெளிநாடுகளுக்கு சென்றிட விரும்பவில்லை.

அமெரிக்க அரசு 1928-ம் ஆண்டு மீண்டும் காந்தியடிகளை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை மறுக்க முடியாத சூழ்நிலையால், தனது பிரதிநிதியாக கவியரசி சரோஜினிதேவியை அனுப்பி வைப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.

சரோஜினிதேவி அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டால், பிரிட்டனுடைய ராஜதந்திரம் பொய்ப் பிரச்சாரங்களைத் தகர்த்தெறிவார் என்ற நம்பிக்கையும் காந்தியடிகளுக்கு இருந்ததும் ஒரு காரணமாகும். அதனால் சரோஜினி தேவியை அமெரிக்கா சென்று வருமாறு காந்தியார் பணித்தார்.