பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“பூச்சியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்-அவனைப்
புரிந்து கொண்டால், அவன்தான்

இறைவன்....”

கவிஞர் கண்ணதாசனின் இந்தத் தத்துவப் பாடல் எவ்வளவு அழகாகவும் அழுத்தமாகவும் அமைந்துவிட்டது, பார்த்தீர்களா?

இவ்வளவு மகிமைபூண்ட ஆண்டவன், ஒரு சமயம் கவிஞன் ஒருவனிடம் தோற்றுப்போய் விடுகிறான்.

அது ஒரு தனிக்கதை.

அந்தக் கதையைக் கவிஞர் “கலைவாணன்” சொல்லக் கேட்க வேண்டும்!