பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தாய்க்கு அடுத்தபடிதன்னை நேசிக்கும் கிளியைவாய்க்கு வந்தபடி ஏசுவாள்; கையில் கிடைத்தன எடுத்துகிளிக்கூண்டின் மீதுகண்மண் தெரியாது வீசுவாள்! பசும்பொன் வட்டிலில்பாங்கியர் தரும். பழம்பால்-அவளுக்குப் பழம் பாலாய்ப் புளித்தது; தூண்டுநிலா நெற்றியில்வேர்வை - தூறல்-தூறலாய்த் துளித்தது; மயிற்கண் விசிறியால்மெல்ல விசிறினாலும்-அவளது அயிற்கண் சிவந்து வலித்தது; மெத்தைமேல் கிடந்தும்-கண் மூடாத பெண்ணுக்கு-இராப்பொழுது நத்தைபோல் ஊர்ந்து சலித்தது! பருவம்-அவளைப் புரட்டி எடுத்தது; நித்தியப்படி நிசியானால்... விரகம்-அவளது விழி விளிம்பில் தொங்கும்தூக்கத்தைப் பறிக்கத் துறட்டி எடுத்தது! குதிரைகளின்கடிவாளங்களைப் பற்றி அவள்அசுரவேகத்தில்...