பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 * பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வானுலகு வாழ்த்தை வழங்கியது; தேவகணம் துந்து முழங்கியது! தகனத்திலிருந்து- 修 கொட்டியது பூமாரி, அதில் குளித்தது குந்தியின் குடல் சுரந்த தேன்வாரி! வாசவன் வழங்கிய வாரிசின் வனப்பு மீசுரம் என்றொரு பாசுரம் படித்து அதன் முளரிபூங் கன்னத்தில் முத்தம் வைத்தது மந்த மாருதம்; வெற்பின் முகடு நீங்கி-பிள்ளை முகம் பார்க்க வேண்டி வந்த மாருதம்! சதசிருங்க மலை வாழும் சகல ரிஷிகளும் வந்து அர்ச்சுனனைப் பார்த்தனர்; - ஆசீர்வாதங்களை வார்த்தனர்! (I-பக்127-28) பார்த்தன் அறிமுகம் பட்டு கத்திரித்த மாதிரி சுருக்கமாகவும் அமைந்தது; மனஉருக்கமாகவும் சமைந்தது. பரந்தாமனின் கீதோபதேசத்தைக் கேட்க வேண்டியவ னல்லவா? - 21-22 நகுலன், சகாதேவன். ஐவர்களில் இந்த இருவர் ஒருத்தி வயிற்றில் உதித்தவர்கள்; பஞ்சபாண்டவர்கள் என வழங்கக் காரணமானவர்கள். இணையான அஸ்வினி தேவர்கள் அருளால் வந்தவர்கள். இவர்கள் பற்றிய அறிமுகம் இது: