பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 153 தீனர்களின் தரித்திர நோயைதீர்த்து வைக்கும்தன்வந்திரி! சகலரும் அணுகசாத்திய மாகும்படிசெளலப்பியம் மிக்க தயாநிதி! ஒவ்வொரு நாளும்-அவன் உள்ளங்கை அரிக்கும்; ஒருவருக்காவதுஒரு துளியாவதுஉபகரித்தால்தான்-அவன் உண்டசோறு செரிக்கும்! இன்னும்- - எத்துணையோடு சொல்லலாம்கன்னன் சிறப்பு; எனினும்ஈ காக்காய் தவிரஎவருக்குத் தெரியும்-அத்தகு ஈகையன் பிறப்பு? (1-பக்.212-14) " கர்ணனுடைய குணச்சிறப்புகளை அறிந்துகொள்ள இந்த அறிமுகமே போதும். இதிலும் சில சொல் விளையாட்டுகள் நம்மை முறுவலிக்கச் செய்து விடுகின்றன ! 29. ஏகலைவன்: 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்ற முதுமொழிக்கிணங்க_ஒரு சிறு வேடச் சிறுவனும் காவியத்தில் இடம் பெறுகின்றான். அவனது அறிமுகம் 8 இதற்குமேல் அவன் பிறப்பு முதலியவை நிறுத்தப் பெற்றன.