பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் : 195 46. விராட மன்னன். இவன் பெயர் குறிப்பிடப் பெறவில்லை; மனைவி பெயர் 'சுதேட்டினை. இவள் மன்னனை மணந்த "மஞ்சள் நதி’, போகிற போக்கில் அறிமுகமாகிறான். துரியோதனன் படை பசுக்கூட்டத்தைக் கடந்தபோது அரசன் அறிமுகமாகின்றான். வகையறியாது வயதான வேந்தன் வெகுவாய் விசனப்பட்டான் ஒரு காலத்தில் ஒருவனாய் நின்று வாளைச் சுழற்றினான்! சுழற்றிய வாள் கொண்டு வன்கணாளர் தம் வாழ்வைக் கழற்றினான்! நெருநல் நேர்ந்த சமர்களில்-தனது செருநர் செயலிழந்து போயினும்.... முழைநீங்கிய சியமாய்மூரி முரித்துக்கிளம்பிவிராட ராஜன்-தனது விரல்களை.... கட்கத்தில் வைத்தால்கதிகலங்கி-தன் வாளைக் கட்கத்தால் வைத்துக்கைகுவிப்பான் பகை; பிறகு என்ன? விராடன்பாதங்களில் கிடக்கும்பரிதாபத்திற்குரியபகையின் சிகை !