பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 காவிய மாந்தர்கள்அறிமுகம் : 205 அருள்மிகு கண்ணன்அத்தகு ஆயுதம்! அவசியமா என்னஆயுதத்திற்கு ஆயுதம்? (I-பக். 304) 51. சல்லியன். இவன் மத்திம தேசத்து மன்னவன். வாலியார் இவனைப்பற்றிச் செய்யும் அறிமுகம் இதோ: பாண்டவராகியபஞ்சவரில்... நான்காவதும் ஐந்தாவது மானநகுலன்; சகாதேவன். மாத்திரியன்மகன்கள்; மாசறுகுணத்தில்-மற்றிரு குகன்கள்! அவர்களின்அம்மான். அரசன் சல்லியன்; அவன்அப்பழுக்கற்ற துல்லியன்; வெல்லற்கரியவில்லியன், அறம் பிழைப்போன்-அவன் கணக்கில் புல்லியன்! (I-பக். 305) உவப்பிலாவியத்திற்குரிய சேனையுடன் வந்து கொண்டிருந்த சல்லியனை வழிமறிக்க ஏற்பாடு செய்து, விருந்து உண்ணச் செய்து, விரியனை துவ சத்தில் வைத்திருக்கும் விரியன்-துரியன் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். சல்லியனும் காமராசர் பாணியில்,