பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு குந்தி ஒன்ற குன்றுக்கும்; காந்தாரி ஈன்ற கன்றுக்கும். எடுத்ததற் கெல்லாம் ஏழாம் பொருத்தம் (1-பக். 163) (8) கெளரவர்கள் பாண்டவர்களை விருந்துக்கு அழைத்த நிலையில்: தம்மை விருந்துக்கு அழைத்தது வேங்கை என்பதை மருந்துக்கும் அறியாத மறிகள். (1-பக். 169) (9) சத்தியவதியைப் பற்றியது: அவள் பரதவர்குலத்துப் பாவை!-இந்தப் பூவில்-எந்தப் பூவிலும் இல்லாத வாசத்தை-தன் கேசத்தில் வைத்திருக்கும் பூவை! வலைச்சேரியில் உலவும் வாசனைச் சேரி; நெய்தல் நிலத்தில் பெய்த நறுமண மாரி! (1-பக். 32) (10) சந்தனு-சத்தியவதிமீது கொண்ட காதல் பற்றியது: புத்திர வாஞ்சை- - ஒருபுறம;