பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஆடை-பால் ஆடை என்ற தொடர் வாடை நூல் ஆடையில் நின்ற பால் ஆடையைக் காட்டுவது அற்புதம்! நறுமணம் மறுமணத்தில் கொண்டு செலுத்திய முறை மேலும் அற்புதம்! அற்புதம்! அம்புலி குலத்து சந்தனு மீனவப் பெண்ணை மணந்து இன்பம் அநுபவித்ததைக் கூறும் போக்கு படிப்போரின் கவனத்தை ஈர்க்கும் போக்காக மாறுகின்றது. மன்னனுக்கு மறுபடியும் ஒரு முதல் இரவு!-இந்த முதல் இரவு முடியாமலே நீண்டது-பல பகல் இரவு! வானவப்பெண்-முன்னம் வளிச்சுடருட்டிய மெத்தையை மீனவப்பெண்-துசுதட்டி மீட்டும் விரித்தாள்; பிறகு-தன் மேல் பிச்சாய் இருக்கும் புருஷனையே-மார்புக் கச்சாய்த் தரித்தாள்! காவலன் குடங்குடமாய்க் குடித்தான் காய்ச்சிய பாலை; பின் கும்மிருட்டில் படித்தான் காமத்துப் பாலை! அரசன் நினைவில் அந்நியமானது அத்தினபுரம்; அதிக அந்நியோந்நிய மானது அந்தப்புரம்!