பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் * 337 அஞ்சு முத்துக்களைக் கோத்தஆரமாயிருக்கிறாள்! அவள் பொருட்டு-உங்கள் அஞ்சு பேருக்குள்விரோதம் எழக்கூடும்; உறவில்விரிசல் விழக்கூடும்! உளிபிளக்கவொண்ணாதவலிய பாறையைபெண்னென்னும் கிளி பிளக்கும்; மயிர் ஊடாடா உறவு-ஒரு ஊடாடக் கெடும்! இதற்கு இன்றளவும்-ஒரு சாட்சியாக இருப்பது-இரு சகோதரர்கள் கதை, கேள்! சொல்கிறேன் அதை! இரண்ய கசிபு என்னும்-ஒர் இராக்கதனிருந்தான் முன்னம்; அந்த அசுரனது வமிசாவழியாய்வந்தவர்கள். “கந்தன் உபசுந்தன்” எனும்சகோதரர் இருவர்; இருவரும்சிந்தையில் செயலில் ஒருவர்! இந்த இருவரும். مس۔ نB%HT6u கட்டை விரலை மட்டுமே