பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் : 351 6. தரும வியாதன் கதை இது பஞ்சதந்திரக்கதை போல்'-Relay Race போல் நடைபெறுகின்றது! இல்லத்தரசியின் இன்னுரை கேட்டு. 'பெண்னே! நான் பாதிவெந்த பருக்கை; உன்னால் ஒழிந்தேன் உள்ள செருக்கை!" என்று. கவுசிகன் கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு-மிதிலை நகருக்குச் சென்றான்; தரும வியாதனைக் கண்டு; விதிர்த்து நின்றான்! வாடிக்கையாளருக்கு விற்றுக் கொண்டிருந்தான். மாடு; மறி; மான்; மகிஷம்; இறைச்சிகளை எடைபோட்டு-கசாப்புக் கடை போட்டு. ஒருவினோதன்-என 6 எந்தப் புற்றிலிருந்து எந்தப் பாம்பு வரும்? யார் கண்டார்கள்? தருமவியாதன் நிலை அவனை விதிர்க்கச் செய்து விடுகிறது.