பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தகவு மிக்கது-நான் தரித்துத் துப்பிடும் தாம்பூலத்தின் எச்சம்! கேள்! கேள்! என்று-அந்தக் கீழ் மகனைக் கொண்டாடுகின்றாயேகேள்! அண்ணே! கேள்! எனதுகேள்வியை கவனமாகக் கேள்! உனக்கும் எனக்கும்-அவனா உறவு? அவனாலன்றோஅனலில் - ஏற்பட இருந்தது-நமக்கு இறவு! அவனாலன்றோஅவையில் புலம்பியது நாம் பூமுடித்த புறவு! அவன் அரசோச்ச-நாம் துவராடையோடு ஏற்க வேண்டுமா துறவு? கண்ணன் துதுசென்றும்கண்ணிலான் பிள்ளைஎண்ணம் திருந்தமாட்டான்; எதற்கும் வருந்தமாட்டான்! முரசுக் கொடியுடையமூத்தவனே! போர்முரசைக் கொட்டு; பொறுமையைமூட்டை கட்டு! கை சுழற்றும்-என் கதாயுதத்தால்....