பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வாலியார் இந்நிகழ்ச்சியை துரோணர் வைத்த தேர்வையும் போட்டியையும் அடுத்து அமைக்கின்றார். கர்ணன் அங்கதேசத்து அதிபதியான சமயமும் அதுவே. இந்திரன் ஒரு தள்ளாடும் கிழ அந்தணனாக வருகின்றான். அந்த நிலையை வாலியார், "கிழடு" என்பதன் கதைச் சுருக்கம்சொல்லியது அவனதுசதைச் சுருக்கம்! (1-பக். 230) கர்ணனின் கட்டளைப்படி ஒர் அரசு ஊழியன் வயோதிக அந்தணனை அவைக்கு அழைத்து வருகின்றான். வந்த அந்தணன் வள்ளலை வானளாவப் புகழ்கின்றான்; வாழ்த்துகின்றான். அதற்கு அடக்கமாகக் கர்ணன் மொழிவது: அந்தணரே! தங்கள் ஆசிகளுக்கு நன்றி; ஒருவனை வேறெது வாழ வைக்கும் நல்லோர் வாழ்த்துகள் அன்றி? 'ஈந்து இதயம் உவக்கும் வேந்து! &fü官一 என்னை தாங்கள் புகழ்ந்தது தகாது; அந்த வான் தருவதைவிட நான் தருவது மிகாது!