பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சேவையைப் பெற்று மெய்மயிர் புளகாங்கிதம் அடைகின்றோம். இரண்டாவது விசுவரூபம் மிகமிக அற்புதமானது. அக்காலத்தில் நாம் இருந்திருந்தால் அவனருளால் பார்த்து மகிழ்ந்திருக்கலாமே என்ற ஏக்கம் நம்மைப் பற்றுகின்றது. கண்ணன் நல்கிய மூன்றாம் கண்ணால், விசுவரூபத்தை விழிகளால் விஜயன் வழித்து வழித்து உண்டான்! (I-பக். 500) தெளிவு பெற்ற நிலையில், 'அறிந்தேன்-நீ அழியாப் பொருள்; அறிந்தேன்-நீ அறியவேண்டிய பழம்பொருள்; அறிந்தேன்-நீ அணுவும் மாறா மெய்ப்பொருள்; அறிந்தேன்-நீள் அகிலம் நினது கைப்பொருள்! (III-பக், 502) என்கின்றான். மயங்கி நின்றவன் மாயன் சொற்படி இயங்குகின்றான். மேற்கூறியவற்றால் கவிஞர் வாலியின் கிருஷ்ண பக்தியை ஒரளவு- ஒருவாறு-அறுதியிட முடிகின்றது. அவதாரங்கள் அனைத்திலும் கண்ணன் தானே அனைவரையும் ஆகர்ஷிக்கும் அவதாரம் நம்மாழ்வாரின் கண்ணன் ஈடுபாடு இயம்புதற்கரியது.