பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு மண்மிசை-ஒரு பெண்மிசை சனித்தலால் அல்ல என்பதைச் செவிகளில் வாங்கு! (III-Lö. 447) என்பது காண்க. இது வள்ளுவர் பெருமானின், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (குறள்-972) என்ற வாக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளதைப் போல் காணப்படுகின்றது. இவண் கூறியவை யாவும் பாண்டவர் பூமியைப் படிப்பதால் நம்மால் அறியப் பெறும் பயன்களாகும்.