பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு மோகிக்க வைக்கும்மோகத்தில் சேர்க்கும்-அந்த மோகன முறுவல்-எந்த முகத்திலும் இல்லை! கச்சுக்குள் இருப்பினும்கரகங்கள்-வானோரைப் பிச்சுக்குள் இருத்தும்பேராற்றல் பெற்றவை, பட்டுக் கலைக்குள் இருப்பினும்கதலிகள்-இமையாரை வலைக்குள் இருத்தும்வசீகரம் உற்றவை! இன்னொரு விசுவாமித்திரன்எனக் கணக்கிட்டு-நூறு விழுக்காடு-விரகத்தில் விழுக்காட்ட... அடங்காஆசையெனும்அழுக்காற்றில்முழுககாடட... ஜாலவதி-எனும் கோலமதிவானிலிருந்துவையம் இறங்கியது; வையமே-அதன் வனப்பு வெளிச்சத்தில்ஒளிமயமாய்ப் பிறங்கியது! உக்கிரம் மிகுந்த ஒரு நோன்புக்கு-ஊறுசெய்ய வக்கிரம் முயன்றது; சரத்வான்முன்நின்று-அது . முயற்கூடொத்த முகங்காட்டிமோக நடம் பயின்றது!