பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை விளக்கம் படுத்துவதற்கும் துணையாக இருக்க வேண்டுமேயன்றி, அதைச் சிதைக்கவோ மாற்றவோ துணையாக இருத்தல் கூடாது. இதைக் கவிதை கற்பிக்கும் முக்கிய நோக்கமாகக் கொள்ளவேண்டும் ஆசிரியர்கள். கவிதைகளைத் துய்க்கும் பயிற்சி மாணாக்கர் கட்கு ஏற்பட்டு விட்டால், ஆசிரியர் கவிதையை இரண்டாவது தடவை படிக்கும்பொழுதே அவர்கள் கவிதையை ஒரளவு தம் உள்ளத்தில் அமைத்துக்கொண்டு விடுவர். அடுத்து ஒன்றிரண்டு தடவை படிக்கும்பொழுது ஆசிரியர் பாட்டின் உயிர்கிலைக் கருத்துக்குப் போய் அதை எடுத்துக்காட்டவேண்டும். அக் கருத்தை, காட்சி அல்லது கதை நிகழ்ச்சியை, நமக்கு உணர்த்தவே அப்பாடல் கவிஞனால் பாடப்பெற்றது என்பதை அவர்கள் அறியச் செய்தல் வேண்டும். இரண்டாம் நிலை: பாடலை அல்லது பாடல்களை ஒரு முழுப்பொருளாகவே கருதவேண்டும். பாடல்களைப் i. Η ό!} விவரங்கள் அடங்கியவை என்று கருதிக் கண்ணழித்து (பதச் சேதம் செய்து) சொல்லுக்குச் சொல் பொருள் கூறியும், பாடல் களில் வரும் அணிகளுக்கும் இலக்கணக் குறிப்புகளுக்கும் தனித் தனி விளக்கம் கூறியும் பாடல்களை விளக்குதல் தவறு. முதலில் சொல் சொல்லாகப் பிரித்து உரை சொல்வது, உரைநடை யாக்குவது, உவமைப் பொருள் கேட்பது முதலியவற்றைக் கையாண்டு பழைய முறையில் கற்பித்தல் கவிதைச் சுவையைக் கெடுத்துக் கவிஞனின் உணர்ச்சியை அறியத் துணை செய்வ தில்லை என்று இக்காலத்தவர் அம்முறையைக் கண்டிக்கின்றனர். பாடல்களைப் படித்து அவற்றின் உயிர்நிலைக் கருத்தையும் உணர்ச்சி நிலையையும் அழகையும் அறிந்த பிறகு, அவற்றை மீட்டும் நன்கு உணர்வதற்குத் துணை புரியுமளவிற்கு விளங்காத அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறலாம்; சில விவரப் பகுதி களை விளக்கலாம். இறுதியாக ஒருமுறை பாடல்களை இன்னோசையுடன் பாடி மாணாக்கர்களைக் கவிதைச் சுவை யின் கொடுமுடிக்குக் கொண்டுசெலுத்தவேண்டும். சிலப்பதி காரம், மணிமேகலை, கம்பராமாயணம், பாரதம் போன்ற நீண்ட கதைப் பகுதியாக இருந்தால், அதைக் கருத்து முடிவு கொண்ட சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு கற்பித்தல் வேண்டும். உணர்ச்சியைப் பெறுவதே. பாடல்களுக்குச் சொற்பொருள் (பதவுரை), பொழிப்புரை, கருத்துரை, இலக்கணக் குறிப்புகள் தொடைநயம், அணிநயம் முதலியவற்றை நன்கு எடுத்துக் க-7