பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


என்ற பாடலில் - மேல்கூறிய கருத்துக்களை நன்கு தெரிந்துகொள்க.

இவ்வாறு அரசர்களாய் இருந்தவர் அருங்கவி பல புனைந்து மக்களுக்கு அறிவு கொளுத்தியுள்ளார். அரச பொறுப்பைமட்டும் பாராது, அரச குடியினில் பிறந்துவிட்டோம் என்று இறுமாந்து, அறிவு மதுகை இன்றி வாழ்நாள் கழிக்காது, தாமும் அறிவுசான்ற புலவர்களாகப் பொலிந்து, இன்கவிகள் பல இயற்றிய பண்பு தமிழ்நாட்டின் தனிப்பண்பாகும். இன்னணம் கவிபாடும் கவிஞராய் மன்னர்கள் பலர் விளங்கியதால்தான் இவ்வரசர்களும், நல்லிசைப் புலவர் வரிசையில் வைத்து எண்ணப்பட்ட பெருமை பெற்றனர். இவர்களது அறிவுத்திறனை மேலும் மூல நூலில் முழுமையும் கண்டு மூதறிவு பெறுவீர்களாக!