பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியகம்

ஆன பிறவொன்றை யண்டிப் பணியாது;
தானும் பிறவொன்றைத் தாழ்த்தாதஃ-தேனென்றாள்
இன்பமும் துன்பமு மென்னா வியல்புடைய
அன்பினுக் கன்பே அடைவு.

இறைவனுள னென்னுள்ளத் தென்னாது நானே
இறைவ னுளத்துள்ளே னென்மின் - இறைவனின்
நீங்காத அன்பை நிகழ்த்துங்கால் நீங்களின்
ஓங்குங் குரலி லுவந்து.

அன்பின் வழியை யடுத்தவழிக் குத்திருப்ப
லென்பதியலா தெவராலும் - மன்பதைக்குள்
தக்கோ னெனக்கண்டால் தன்வழிக்குத் தான்திரும்பும்
மிக்கோரின் மேலும் மிகுத்து.

தன்னையே தானடைவ தன்றிமற் றன்பினுக்
கென்னபிற வாசையு மில்லைமன் - பின்னையும்
வேறுசில வாசைகள் வேண்டி னவைகளுமிவ்
வாறமையக் கூடு மடுத்து.

உருகி யிரவுக் கிசைபாடி யோடும்
பெருகு புனலாகிப் பேணத் - துருவி
அளவிறந்த மென்மைத் துயரறிய; வாங்கறிய
வுளமறிந் தூக்கு முணர்வு!

குறுகு மினிய வைகறையில் கோதிச்
சிறகடித்துக் கண்விழித்த சிந்தை - பிறகும்
பிறிதுமொரு நந்நாளைப் பெற்றபல னாக
மறவாது கூறமுக மன்!

155