பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்


தண்பொழில் சார்ந்து தனித்துத் தணியாத
நண்பகலுக் கோய்ந்திருந்து, நல்லன்பின் - பண்புகளில்
ஆராத வின்ப வமுதருந்தி யாராயச்
சீராகக் குந்தச் சிறிது!...

என்பன சொல்ல விதயங் குளிர்ந்தவர்கள்
இன்பம் பெருகவெழுந் தெல்லாரும் - அன்புடனே
கேட்டறி யாதனவும் கேட்டுவந்தோ மென்றுரைத்துத்
தாட்டுணையில் வைத்தார் தலை!


(கருத்து : கலில் ஜிப்ரான்)

156