வெள்ளியங்காட்டான்
வழக்கம்போலந்திமறைந்திரவு தோன்ற,
வானம்பூப் பந்தலென வடிவம் கொள்ள,
வழக்கம்போல் முல்லைமணம் அள்ளித் தென்றல்
வாலிபத்தில் காதலதை வளர்க்க, நானும்
வழக்கம்போல் துயிலாது, வாழ்வை எண்ணி
வைகறையை வரவேற்கக் காத்தேன்; ஆனால்,
வழக்கம்போல் வரவில்லை தாரா வாயால்
வார்க்கவிலை குரலமிழ்தென் செவியி லன்றே.
தாராவைத் தன்னுடனே அழைத்து வாராத்
தலையாய வைகறையும் கசந்த தாலே,
ஏராரும் பசுங்கிளிதான் கூட்டி னின்றும்,
'இனியெழுயென் குலக்கொழுந்தே! என்ற சொல்லும்,
காராவைக் கறந்துடனே சுண்டக் காய்ச்சிக்
கற்கண்டைப் பொடித்தளவாய்க் கலந்த பாலும்,
பாரோர்கள் பாராட்டும் பண்டைச் சங்கப்
பழந்தமிழ்ப்பாக் களும்பலவும் கசந்த தன்றே!
அகமிங்கே ஆழ்குளமாய் அமைந்தும் அங்கே
அதிகாலை அரவிந்தம் மலர்ந்த தென்னும்
முகமெங்கே? முயற்சியொடு முடிவு காண
முறுவலமிழ் தளிக்கிறமோ கினியின் நெஞ்சே!
சுகமெங்கே சோர்விருளும் சூழா முன்பே
சொல்விளக்கா யொளியுட்டும் சுடர்தா னெங்கே?
நகமெங்கே சதைவிட்டு நீங்கிற் றென்ன
நானிங்கே நலிகின்றேன். நங்கை வயங்கே!
52