பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

பூவினைப் போன்றெழில் மேனியாள்-என்றன்
புலன்கட் கணிகல மானவள்;
காவியம் போலும் இனியவள் - என்னருங்
கண்ணெனத் தக்க துணைவியை,
கேவல மான இடங்களில் - வைத்துக்
கேடு விளைக்கத் துணிந்திலேன்;
ஆவி கலங்க வருந்தினேன் - செய்ய
யாதென நொந்துளங் குன்றியே!

'வேதனை எல்லையை மீறுது-உம்மை
விட்டுப் பிரிந்திங் கிருப்பதால்;
காதல! வீடு கிடைத்ததா? - அன்றிக்
கட்டி முடிந்ததா? கூறுங்கள்.
சோதனை மேலும்செய் வீரெனில் - உள்ளம்
சுக்குநூறாகும் உடைந்'தென,
மாதம் இருமுறை காகிதம்- அவள்
மலர்க்கரம் நோக வரைகிறாள்.

நண்பன் ஒருவன் நவின்றனன்- 'மிகவும்
நல்லதோர் வீடுளதங்'கென
எண்பது ரூபாய்தான் வாடகை - ஈந்தால்
இன்றே ஒழித்துத் தருவராம்!
பண்புடன் முப்பது நாட்களும் - சென்று
பாடுபட்டால்முதல் தேதியில்
உண்ப துடுப்பதற்கேற்பவே வரும்
ஊதிய மேஓரு நூறுதான்!

61