பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() () உன் குணமும் உயர்ந்த ஒரு தாய்வ யிற்றில் உடன் பிறந்த கோவிந்த சாமி என் போன் தன் குணமும் சீர்தூக்கிக் காணுங் காலை சரியாக நிறைகாட்ட முடியவில்லை; உன்குணமும் அவன்குணமும் ஒன்றை யொன்று விஞ்சுவதால் உணர்ந்தறிய இயல வில்லை; நன்கொடையும் உயர்பண்பும் குடிப்பி றந்த நல்லோர்க்கு வாய்க்கின்ற இயல்பு போலும் { 8 ) ஈகை மனம் பெற்றவனே! அறுபான் ஆண்டை எய்துகின்ற இந்நாளில் நின்னை நாங்கள் வாகைபெறும் பெரியாராக் கானு கின்றோம்; மருத்துவத்துக் கலைஞர்தமைக் கருப்பஞ் சாற்றுப் பாகை நிகர் செந்தமிழில் பாடல் நல்கும் கவிஞர்தமை, இலக்கியத்தில் தோய்ந்தெ ழுந்து மேகமெனச் சொல்பொழியும் அறிஞர் தம்மை மேலாக்கி மகிழ்ந்தவன் நீ அண்ணா! வாழ்க! (9)

  • சில மிகு சான்றோனே! நின்னி டத்துச்

சிலகுறைகள் தான் கண்டேன் கூறு கின்றேன்; ஞாலமிசைத் திருக்குறளே ஒங்க நெஞ்சில் நாடுகிறாய் ! தமிழொன்றே போற்று கின்றாய்! கோலமொழித் தமிழ்நெஞ்சங் கொண்ட வர்க்கே கொடுக்கின்றாய்! குறைகாணின் கடிந்து ரைப்பாய்! மேலுமெனை ப் போல்வார்க்கும் பணிந்து நிற்பாய்! மேலோனே கணக்கறியாய் ஈயும் போது! (16) --- _ ___ _ == 轟 கடி o - 舊 * Fo * -- -- - அண்ணா - இவரை எல்லாரும் பிரதர்" என்றே அழைப்பதால் அண்ள்ை எனப் பெற்றார்.

  • இப்பாடல் வஞ்சப் புகழ்ச்சியசிை