பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதுகோல் தெய்வமென் எழுத்துந் தெய்வம் குழந்தையுங் கூளமுந் தெய்வ மென்றே கடவுட் கொள்கை கழறும் மறைநூல்; புரட்சிச் சின்னம் சத்திரம் சாவடி தண்ணிர்ப் பந்தர் வைத்தன போதும்! வாழ்வில் ஒளிதர ஏழை மாந்தருக் கெழுத்தறி வித்து வீடுகள் தோறும் கலை விளக் கேற்றுக வீதிகள் எங்கணும் வேண்டுக பள்ளி கல்வி இலாததோர் ஊரினைக் காணின் ஒளிநெருப் புண்ண ஊட்டுக என்று பொங்கி எழுந்த புரட்சிச் சின்னம்; விடுதலை முரசம் பறையர் குறவர் பரவர் மறவர் திறமை மிகுத்திடும் தீதறு தொழிலைப் புரிந்தன ராகிப் புகழ்தரு கல்வி அறிவால் உயர்ந்திட அகிலம் எல்லாம் வீறிட் டெழுந்த விடுதலை முரசம்; போர்ப்படிை வரிசை வேதனை தந்திட வேற்படை வரினும் தலையில் வானம் தகர்ந்து வீழினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை என் றார்த்தெழுங் கவிதை போர்ப்படை வரிசை: புதுமைக் கருவூலம் செத்தபின் செல்லும் உலகம் உளஎனல் பித்துரை பேயுரை என் றுதிய சங்கம்; சுதந்திர தாகம் தணிக்கும் சுனைநீர் ; அடிமையில் மோகம் அழிக்கும் சுடரொளி; தாய்கை விலங்குகள் தகர்க்கும் சிற்றுளி இன்னல்கள் தீர்க்கும் இனியநன் மருந்து; ஒருவற் குணவிலை எனும்உரை கூறின் 43