பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 உலகை அழிப்போம் எனவெழும் அணுவெடி : சாதி மதங்களைச் சாய்த்திடும் கொடுவாள்; அறிவுரை தரு நூல் . . . -- கற்றோர் மற்றோர் கற்பதற் கெளியது; (95) தேன்படு சுளைளனத் தித்தித் திருப்பது; தாய்மொழி மறந்து தாழ்வினில் விழுந்து தமிழர் எனும்பெயர் தாங்கிடும் அன்பர் ஆணவம் அடங்க அறிவுரை புகல்வது; என்னால் ஒல்லுமோ? - திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல் (100) பாரதிப் புலவனைப் பகர்வன்’ என்று பாரதி தாசன் பாடின ராயின் எளியேன் என்னால் இயம்பிடல் ஒல்லுமோ? அவனும் நாமும் வாழத் தமிழ்மொழி வழிகள் காட்டினன் நீளத் திரிந்து நெறிதடு மாறிக் (105) கண்குரு டாகிக் காலங் கழித்தோம் நாட்டுணர் வூட்டும் பாட்டுகள் சொன்னான் கேட்டில செவிகள் கிடந்தனம் செவிடாய் இசைத்தமிழ் பாடினான் இனித்தது தெரிந்தும் வசைக்கிலக் காகித் தமிழிசை மறந்து (110) வாய் திற வாமல் ஊமைய ராகி வாழ்ந்தோம், மங்கையர் வாழ்வினிற் புதுமை மலர்ந்திடக் காணோம், மதவெறி கொண்டோம், பழமைச் சேற்றில் படிந்தோம், மூடச் செயல்கள் பலவும் சேர்த்தோம் அந்தோ? (115) ஒற்றுமை விடுத்தோம், கற்றவை மறந்தோம், செற்றிடு விலங்குச் செயல்கள் மிகுத்தோம், அவன்மொழி மறந்தோம், ஆர்ப்பரித் திருந்தோம், o மண்டபங் கண்டோம், மாலைகள் சூட்டினோம், of so கவிதைத் தொகுப்பெலாம் கண்கவர் முறையில் (120) அச்சில் வெளியிட் டகமிக மகிழ்ந்தோம்;