பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o, or சென்னை நகர்ப் பெருந்திடலில் மக்கள் கூட்டம் சிங்கமெனச் சூழ்ந்திருக்கத் தலைவர் நின்றார் முன்புறத்தில் துப்பாக்கி வீரர் நின்றார் முதன்மைபெறும் ஊர்காவல் தலைவர் வந்து பின் னின்று மறுப்பானை தந்தார்; திங்கள் பிழம்பனலைக் கக்கியது கண்டேன் கண்டேன் உன்னுமுனம் உடுக்கையிழந் தவன்கை போல உதவுநட்புக் கிலக்கியமாய் வாழ்ந்து நின்றார் (24) சொல்வல்ல நல்லறிஞர் காஞ்சி அண்ணா துரை இவர்தம் கருத்துரையை மறுத்து ரைப்பார் வில்விடுக்கும் அம்பெனவே சிலகால் தாக்கி விரிவுரைகள் ஆற்றிடுவார்; கேட்டி ருந்தும் நல்லுள்ளம் கொண்ட இவர் நயந்து பேசி நல்லவரே இவ்விளைஞர் தமிழன் என்றே சொல்லிடுவார்; அழச்சொல்லி இடித்து ரைக்க வல்லார்நட் பாய்ந்துகொளும் துாய நெஞ்சர் (25) 壘 豐 இவ்வண்ணம் வள்ளுவர்தம் வழியில் நின்ற என்தலைவர் திரு.வி. க. வாழ்விற் கண்ட மெய் வண்ணம் ஒருசிலவே விளம்பி நின்றேன் மேலான மெய்ந்நெறியே அவர்தம் தோற்றம் உய் வண்ணம் நமக்கவர்தாம் உணர்த்திச் சென்ற உண்மைகளை மறவாமல் ஒர்ந்து நின்று செய்வண்ணம் செயலாற்றி வாழ்வோம் வாழ்வோம் செந்தமிழும் நம்நாடும் வாழ்க! வாழ்க! (26)