பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துாற்றாதே வாழ்க்கைத் துணைவியுனை வேண்டுகிறேன் : நேற்றே விளம்பி ந்ெடுமூச்சு வாங்கவைத்தாய்! இன்று விளம்பி எடுக்காதே என்னுயிரை! ஒன்று திரண்டிங் குருவாகும் கற்பனையால் புத்துலகஞ் செய்யப் புறப்பட்ட பாவளத்தைக் கத்திக் கெடுக்காதே கட்டழகி எட்டியிரு' என்றுவாய் மூடவில்லை, ஏந்திழையாள் புன்னகைத்து, நன்று கவிமணியே! நான்விலகி நிற்கின்றேன். வீட்டைப் புதுக்க விதியில்லை, முன்னின்று நாட்டைப் புதுக்கவழி நாடுகிறீர்! அவ்வழியைத் தெள்ளத் தெளிவாத் தெரிவை எனக்குரைப்பீர்! உள்ளத் திருத்தி உணவை மறந்திருப்போம்' என்றாள் அருகிருந்தாள்; என்னுயிரே! கூறுவன் கேள்! பொன்றா நலம்பயக்கும் புத்துலகங் காண்பதெனில் புத்துலகம் காணும் வழி மாசு மறுவகற்றி, மாண்பை மிகப்பெருக்கிக், காசு பணங்கொழிக்கக், கல்வி நலஞ்செழிக்க, மேழித் தொழில்சிறக்க, மீக்கூர் பசிபறக்க, ஆழிக் கடல்வணிகம் ஆயிரம்பல் லாயிரமாய்ப் பல்கிவர வேண்டுமடி பாட்டால் முடிவதுவோ? சொல்லும் வினைமுடிக்க நல்லரசே வேண்டுமடி! புன்மைச் செயலொழித்து நன்மை புகவிடுத்தால் உண்மைப் புதுவுலகம் உண்டாகும் ஈதுண்மை; ஆள்வோர் புகுத்துசெயல் அத்தனையும் நன்றேனன் றாள்வோரே தீர்ப்பளித்தல் ஆமோ? அரசியலில் விளம்பி - சொல்லி *நேற்று ஏவிளம்பி, இன்று விளம்பி ஆண்டு என்னுங் குறிப்புங் காண்க.