பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வல்லவராய் நாளை வருவதெலாம் காண்கின்ற நல்லவராய்க் கல்வி நலங்கொண்ட பேரறிஞர் சிந்தித்துச் சீர்தூக்கிச் செப்புகிற நல்லுரையை வந்தித்துப் போற்றி வரவேற்க வேண்டுமடி! ஆள்கின்ற நாமே அறிஞரிவர் சொற்கேட்டால் தாழ்வன்றோ?' என்னும் தவறான எண்ணத்தால் புத்துலகம் காண்பதில்லை; புற்றுலகங் காட்டிவிடும் தத்தைமொழி! என்றேன்; தடுத்து நிறுத்தி, அறிஞர் புகழ்பாடல் ஏனத்தான்? நன்கு புரியும் படி யாப் புகன்றிடுவீர்” என்றுரைத்தாள்; வானொலியார் கட்டளை கண்ணழகி! வானொலியார் கட்டளைதான், புத்துலகம் பண்ணுதற்கு நல்லறிஞன், பாவல்லான், விஞ்ஞானி, ஏருழவன், வாணிகன், இத்தகையார் தம்பங்கில் பேரறிஞன் பங்கிசைக்கப் பேணிக் கொடுத்ததனால் பாடுகின்றேன் என்றதும், அப் பாவை விழிசிவந்து, நாடு புதுமைபெற நங்கையரைத் தள்ளிவிட்டீர்! புத்துலகில் பெண்ணைப் புதைத்துவிட்டீர்!’ என்றெழுந்தாள்; இத்தவறு நானோ இழைத்தேன்? கனிமொழியே! எய்தவனை நோகா தெனைக்கடிந்தாய்! வானொலியார் செய்தபிழைக் கென்செய்வேன்? சேயிழையே! சற்றுக்கேள்! அறிஞன் இல்லா அரசு பொற்சிலம்பை விற்கவந்த பூம்புகார்க் கோவலனைப் பொற்கொல்லன் சொற்கேட்டுப் பொல்லாக் கொலைசெய்து பாண்டியன் செங்கோல் பழுதுபடக் காரணமென்? ஆண்டோர் அறிஞனிலாக் காரணமே ஆகும்; அறிஞன், கவிஞன், விஞ்ஞானி, உழவன், வாணிகன் என்பன வானொலி யார் தந்த தலைப்புகள்.