பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவர்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தலைப்பு: குறிஞ்சி இடம் : அண்ணல் சுப்பிரமணியனார் மணிவிழா புதுக்கோட்டை காள் o 19–10–1958 கலிவெண்பா பாண்டி எமக்களித்த பாரதி தாசனெனும் பாண்டியனே! எங்கள் பரம்பரைக்கு நற்றலைவா! சார்ந்து கவியரங்கில் தண்டமிழால் பாப்புனைவீர்! ஆர்த்திங்கு வந்த அவையோரே! என் வணக்கம்; வள்ளல் மலை துய மனத்தொண்டர் சுப்ரமண்யத் தோன்றல்தமை மேய புகழ்போல மேலோங்கு நல்லமலை; பொன்னாடை போர்த்துப் பொலியுமவர் தோற்றம்போல் மின்னாடு மேகங்கள் மேற்போர்த்த பச்சைமலை; பண்ணிசைக்கும் வண்டினஞ்சேர் பைம்பொழில்கள் சூழுமலை, அண்ணலார் நெஞ்சம்போல் தண்ணென் றிருக்குமலை; வண்ண மலர்தோய்ந்து வாசம் பரிமாற நண்ணும் குளிர்தென்றல் நாடோறும் வீசுமலை;