பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 () வள்ளல் கரம்போல மாணிக்கம் முத்தெல்லாம் அள்ளி இறைக்கின்ற வெள்ளருவி ஆர்க்குமலை; வந்தார்க்குத் தந்து மனங்குளிரச் செய்வதற்கு முந்துவார் போல முகில்குளிரச் செய்யுமலை; дѣт 1 дР - அந்த மலைச்சாரல் ஆழச் சுனை யாட வந்தேன் ஒருநாள்; வடிவழகி ஆங்கொருத்தி வேங்கைமரத் தின் கீழ் விளையாடும் தோழிகளை நீங்கித் தனியிடத்தில் நின்றிருந்தாள்; அன்ன வள்தான் வார்த்தெடுத்த பொற்சிலையோ? வானத்து வெண்ணிலவைப் பேர்த்தெடுத்துச் செய்த ஒரு பெண்ணுருவோ? மின்கொடியோ? தேனா ர்ந்த தாமரையும் செவ்வாம்பல் மென்மலரும் கானார்ந்த நீலக் கருங்குவளைப் போ திரண்டும் எள்ளின் மலரும் எழில் மகிழம் பூவுடனே வெள்ளைநிற முல்லை.அர விந்தத்தின் மொட்டிரண்டும் செங்காந்தட் பூவிரண்டும் சேர்ந்து மலர்ந்திருக்கும் எங்கெங்கும் கானா இளவஞ்சிப் பூங்கொடியோ? ஆடுமயிற் சாயலுடன் அன்னத்தின் மென்னடையும் கூடும் கிளிமொழியின் கூட்டுப் படைப்பாவாள்; சிற்பி மனத்தகத்துக் கற்பனையாற் காண்பதன்றிப் பொற்பின் திருவுருவைப் பூரணமாச் சிற்றுளியால் காட்ட இயலாதே! காவியமும் ஒவியமும் போட்டியிட்டுத் தோற்பதன் றிப் பொற்பெழுதப் போகாத கண் ணுக் கினியாளைக் கண்டேன் விழிவழியே நண்ணிக் கலந்துளத்து நானானாள்; கட்டுண்டேன்; ஐயம் மின் காட்டும் சிற்றிடையாள் மேனாட்டின் ஆரணங்கோ? தென்னாட்டுக் காரிகையோ? அன்றி வடநாட்டுப் மின்காட்டும் - மின்னலைப் போன்ற மேனாட்டின் - வானுலகின்