பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காட்டா மல் கொவ்வைக் கனியிதழாம் நற்கதவால் பூட்டி மறைத்துவைத்தாள்; பூவை யிமையசைவு வாவாவென் றென்னை வரவேற்புச் செய்வதுபோல் சாவாமல் என்னுயிரைத் தாங்க உதவியதே! அப்பார்வை நன்றி அறிவிப்போ? அல்லாமல் தப்பாஎன் காதலுக்குத் தக்க பரிசளிப்போ? குறிப் பறிதல் என்று தடுமாறி ஏங்குங்கால் வேல்விழியில் ஒன்றும் குறிப்புணர்ந்தேன் ஒப்புதலைக் கண்டுகொண்டேன் ஒர்நொடியில் இத்தனையும் ஒன்றாய் நிகழ்ந்தனவே கார்கண்ட தோகைமயில் ஆனேன் கணப்பொழுதில்: கோலக் குறிஞ்சியிடைக் கூடிவரும் ஆறோடி நீலக் கடலோடு நேர்ந்து கலப்பதுபோல் குன்றிற் பிறந்த குறமகளே! என்னெஞ்சில் ஒன்றிக் கலந்துவிட்டாய் ஒருயிர்நாம் என்றேன்; மலைக்குறவர் பெண்ணுக்கு மாலையிட உங்கள் குலப்பெருமை ஒப்புமோ? கூறுகநீர்’ என்றுரைத்தாள்: சாதி நமக்கில்லை சாதிப் பிணக்கெல்லாம் சங்கத் தமிழ்மாந்தர் ஆதிப் பழக்கமன் றவவழியில் வந்தவன் நான் கீழ்மைக் குணமெல்லாம் கெட்டொழியப் புத்துலக வாழ்வுக் குழைத்துவரும் வாலிபன் நான் மேலும் குறிஞ்சிநில மக்கள் குறவரெனச் சொல்வர் புரிந்தவர்கள் இக்குலத்தைப் புன்மை எனப் பேசார் மலைமுகட்டில் நிற்கின்றோம் மண்மீ திருப்பார் நிலைவிட்டு நல்ல நெறிசெல்வோம் ஆதலினால்