பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. அவ்வண்ணம் நீயின்றேல் அன்பனென் வாழ்வெல்லாம் பொய் வண்ண வாழ்வாகி வன்பாலை போலாகும் என்றேன்; அவள் மறித் (து) அவ்வா றுரையாதீர் ஒன்றானோம் நாமினிமேல் உற்றதுணை நீரானிர் திங்கள் முடிசூடித் தேனருவி ஆர்க்கின்ற எங்கள் குறிஞ்சி எழில் காண்போம்" என்றுரைத்தாள்; அச்சமில்லை கொல்லும் விலங்கெல்லாம் கூடித் திரிவதனால் மெல்லியல் நீ அஞ்சுவையே என்னலும் அம் மேன்மகள்தான்

  • யானை புலிகரடி யாழிசைத்தால் தாழ்ந்துநிற்கும் ஏனல்வனங்காப்பேன் ஏதச்சம்? என்றுரைத்தாள்;

н 3 т Ig.6фтт6&r பாடு குற மகளே! பண் னொன்று பாடென்றேன் ஒடும் மறிபோல ஒடியொரு யாழ்கொணர்ந்தாள் ; மெல்விரலால் யாழ்நரம்பை மீட்டிக் குறிஞ்சிப்பண் நல்லிசையால் பாடினாள் நான் கேட்டு மெய்ம்மறந்தேன்; நாட்டை நினைத்தேன் T தேன் பிழியாய்த் தித்திக்கும் தென்னாட்டின் பண்னெல்லாம் ஏன் மறந்த ர் இந்நாட்டார்? ஏதேதோ பாடுகின்றார்! பண் மறந்து போனாலும் பாட்டுப் பொருள்விளங்கத் ம் இ. ཟླཧྥུ།། r— - - - - * = - یمrti :rio ■ 轟 -- a தண்டமிழிற் பாடத் தயங்குவதேன்? என்றயர்ந்தேன்; பாட்டை நிறுத்திப் பசுங்கிள்ளைச் சொல்லாலே "நாட்டம் இலைபோலும் நான்பாடும் பாட்டி லென; நாட்டை நினைந்தேன் நலங்கெட்டுப் டோனவர்தம் கேட்டை நினைந்தேன் கிளிமொழியே வேறில்லை எனல்வனம் தினைப் புனம் மறி - மா ன் குட்டி