பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்



அந்த குழத்தை துறவியிடம் அதிகமான அன்பைக் காட்டிப் பழகியது. பாறை போன்ற துறவியின் மனம் அக்குழந்தையின் அன்புள்ளத்தால் நெகிழ்கின்றது. என்னடா நமது உள்ளம் இவ்வாறு ஓர் உருக்கத்தை அப்பெண் குழந்தையிடம் காட்டுகின்றதே என்று எண்ணிய துறவி, சந்நியாசி நெஞ்சில் பாசச்சலனம் புகக் கூடாது என்ற முடிவில், குழந்தையான வசந்தியை விட்டு விட்டு ஓடுகின்றார்!

ஓடிக்கொண்டிருக்கும் துறவி, வேறோர் சிறு பெண், தனது தந்தையைக் காணாமல் அப்பா, அப்பா என்று அழுதபடியே வறுமைக் கோல வடிவத்தோடு வருவதை, தனது ஓட்டத்தைத் தீடீரென்று நிறுத்தி விட்டுக் கவனித்தார்.

அப்போது, முன்பு அன்பைப் பொழிந்த வசந்தி என்ற குழந்தையின் நிலையை எண்ணி துறவியின் நெஞ்சம் உருகுகின்றது. அதனால், மீண்டும் வசந்தியைப் பார்க்க வேண்டும் ஆறுதல் கூற வேண்டும் என்று நெஞ்சம் உருகி பழைய இடத்திற்கே மீண்டும் ஓடி வருகிறார் வசந்தியைக் காணவில்லை அக்கம் பக்கம் எங்கும் தேடி அலைகிறார்! பரிதவிக்கின்றார்!

துறவுக்குரிய கமண்டலத்தைக் கீழே போட்டு உடைக்கிறார். திரி தண்டத்தை உடைத்தெறிகிறார்! அந்த வழியே வருகின்றோர் போகின்றோர் அனைவரிடமும் வசந்தியைப் பார்த்தீர்களா? என்று கதறிக் கேட்கிறார். வசந்தி எங்கே? எங்கே வசந்தி? என்று கூவுகின்றார்! ஓலமிட்டுக்கொண்டே ஓடி ஓடி அலைகின்றார்! இறுதியில் ஒருவர். வசந்தி இறந்து விட்டாள் என்று கூறக் கேட்டு துயரடைகின்றார்! அழுது கொண்டே அமர்ந்து விடுகின்றார் துறவி!